close
Choose your channels

ரஜினி தெரிவித்த கருத்து சரிதான்: முதலமைச்சர் பேட்டி

Tuesday, November 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நிமிடங்கள் பேட்டி அளித்தால் ஒருசில ஊடகங்கள் அந்த பேட்டியை திரித்து செய்தியாக வெளியிட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடத்தும் நிலை காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் 'எந்த 7 பேர்' என்று கூறியதை ஒருசில ஊடகங்கள் திரித்தும், மலிவான விளம்பர நோக்கத்துடனுடம் செய்திகளை வெளியிட்டன.

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது பேட்டியில் பாஜக குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்தை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ரஜினி மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டதால் அவர் அந்த கட்சியை ஆபத்தான கட்சி என்று கூறியதை ஒருசில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன.

இந்த நிலையில் பாஜக குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் இன்றைய பேட்டியின்போது தெரிவித்தார். 'பாஜக விஷயத்தில் ரஜினியின் கருத்துதான் தன்னுடைய கருத்து என்றும், ரஜினி கூறியது போல் பாஜக ஆபத்தான கட்சி மட்டுமின்றி இந்த நாட்டை சீர்குலைக்கும் கட்சி என்றும், பாஜக ஆட்சி செய்து வரும் இந்த நான்கரை ஆண்டுகளில் தான் இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம்' என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.