close
Choose your channels

பேயாகவும் நடிக்குறாங்க, சீதைவாகவும் நடிக்குறாங்க: நயன்தாரா குறித்து ராதாரவி

Sunday, March 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றபோது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா ஒரு நல்ல நடிகை என்பது உண்மைதான். அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்து இருப்பதே பெரிய விஷயம். அவரை பற்றி வராத செய்திகளே இல்லை. அத்தனையும் மீறி அவர் தொடர்ந்து வெற்றிகரமான நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த பக்கம் பேயாகவும் நடிக்கின்றார், அந்த பக்கம் சீதையாகவும் நடிக்கின்றார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு கே.ஆர்.விஜயாவை மட்டுமே தேடுவார்கள். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் கடவுள் வேடத்தில் நடிக்கலாம் என்ற நிலை உள்ளது. பார்த்தவுடன் கும்பிடுபவது போல் உள்ளவர்களையும், பார்த்தவுடன் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கின்றனர். ஏனென்றால் நீங்கள் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்' என்று ராதாரவி பேசினார்.

ராதாவின் இந்தபேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாடகி சின்மயி, 'ராதாவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.