close
Choose your channels

உள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று மீண்டும் ஒரு அறிக்கை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில்‌ நடைபெறவிருக்கும்‌ உள்ளாட்சி தேர்தலில்‌ நமது அன்புத்தலைவர்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ யாருக்கும்‌ ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால்‌ யாரும்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ பெயரிலோ. ரஜினி ரசிகர்‌ மன்றத்தின்‌ பெயரிலோ, மன்றத்தின்‌ கொடியையோ தலைவரின்‌ பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால்‌ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன்‌ தொடர்ச்சியாக இன்று மாநில நிர்வாகி வி.என்.சுதாகர்‌ அவர்கள்‌ மாவட்ட செயலாளரை அலைபேசியில்‌ தொடர்பு கொண்டூ இச்செய்தியை மிகவும்‌ வண்டிப்புடன்‌ வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்‌.

எனவே நம்‌ திருச்சி மாவட்டத்தின்‌ மாநகர, ஒன்றிய, நகர, பகுதிகளில்‌ நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில்‌, நம்‌ மக்கள்‌ மன்றத்தைச்‌ சார்ந்த யாரும்‌ போட்டியிடவோ, யாருக்கும்‌ ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மீறினால்‌ சட்ட நடவடிக்கைக்கு உடட்படுத்தப்படுவார்கள்‌ என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.