close
Choose your channels

கமல்ஹாசன் பெற்ற ஓட்டுக்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து!

Tuesday, May 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 4% வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும் கோவை, மதுரை போன்ற தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கு அதிகமாகவும், ஒரு லட்சத்தை நெருக்கியும் வாக்குகளை பெற்றிருந்தது.

இந்த நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கமல்ஹாசனின் கட்சி பெற்ற ஓட்டுக்கள் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், 'கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து கிட்டத்தட்ட 4% ஓட்டுக்கள் வாங்கியிருப்பது ஒரு பெரிய விஷயம், அவருக்கு எனது பாராட்டுக்கள்' என்று கூறினார்.

மேலும் அகில இந்திய அளவில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போல் மோடியும் வலுவான தலைவராக விளங்கி வருவதாக தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.