close
Choose your channels

அத்திவரதரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த்! 

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது

அந்த வகையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகின்றது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் இன்று அதிகாலை காஞ்சிபுரத்திற்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கோவில் அதிகாரிகள் அவர் தரிசனம் செய்து புறப்படும் வரை தகுந்த பாதுகாப்பை அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் அத்திவரதரை சந்திக்க காஞ்சிபுரம் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.