close
Choose your channels

ரஜினி அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் 234ம் உறுதி: ஹிட் பட இயக்குனர் கருத்து

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா? அப்படியே ஆரம்பித்தாலும் கூட்டணி வைப்பாரா? அல்லது போட்டியிடுவாரா? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இயக்குனர் பிரவீண்காந்த், 'ரஜினிகாந்த் அதிமுக தலைமையை ஏற்றால் அக்கட்சிக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும் என்று கூறியுள்ளார். ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பிரவீண்காந்தி மேலும் இதுகுறித்து கூறியதாவது:

அதிமுக என்பது ஒரு ஒதுக்கப்பட வேண்டிய கட்சி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கட்சிதான். இப்போது அக்கட்சிக்கு உள்ள ஒரே பிரச்சனை அந்த கட்சிக்கு ஒரு நல்ல தலைமை இல்லை என்பதுதான். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று ஒரு பவர் உள்ள தலைமை அக்கட்சிக்கு கிடைத்தால் நல்லது.

இதனை உணர்ந்து கொண்டு அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் போன்ற தலைவர்கள் ரஜினியை தலைவராக ஏற்று கொள்ள வேண்டும் என்றும், ரஜினியும் இன்னொரு கட்சியை ஆரம்பித்து, புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதைவிட அதிமுகவுக்கு தலைமையேற்று, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று இயக்குனர் பிரவிண்காந்தி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.