close
Choose your channels

வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் செல்வராகவன் நாயகி

Saturday, August 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரெஜினா, தற்போது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். செல்வராகவனின் அடுத்த படத்திலும் சந்தானத்திற்கு ஜோடியாக ரெஜினாவே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'பாகுபலி' வில்லன் ராணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தமிழில் 'மடை திறந்து' என்ற டைட்டிலும் தெலுங்கில் '1945' என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1940களில் நடைபெறும் சம்பவங்களை கொண்ட இந்த படத்தில் இன்னொரு 'பாகுபலி' நடிகரான சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இம்மாதம் கொச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தை 'கழுகு' இயக்குனர் சத்யசிவா இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.