close
Choose your channels

வெற்றியை தூரமாக நின்று நான் ரசித்தவள்: ரித்விகா உருக்கம்

Sunday, September 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்ட்டத்தை நெருங்கிவிட்டது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய இன்னும் நான்கு வாரங்களே உள்ளது. இன்று டேனியல் வெளியேறிவிட்டதால் மீதியுள்ள எட்டு பேரில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த டைட்டிலை வெற்றி பெற்றால் வெற்றி பெறுபவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று செண்ட்ராயன் மற்றும் ரித்விகா கூறும் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. தான் இதுவரை வாழ்க்கையில் எந்த வெற்றியும் பெற்றதில்லை என்று செண்ட்ராயனும், தான் வெற்றியை இதுவரை ரொம்ப தூரமாக நின்று மட்டுமே ரசித்தவள் என்றும் ரித்விகாவும் கூறுகின்றனர்ர். இதற்கு கமல்ஹாசன் வழக்கம்போல் 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை' என்று யாருக்கும் புரியாத பாரதியார் கவிதையை கூறுவதோடு இந்த புரமோ முடிகிறது.

சமூக வலைத்தள பயனாளிகளின் கணிப்பின்படி செண்ட்ராயன் அல்லது ரித்விகா பிக்பாஸ் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இருவரில் யார் வெற்றி பெற்றாலும் இருவருமே உண்மையாக இந்த ஷோவில் விளையாடி வருவதால் நிச்சயம் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாகவே கணிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.