close
Choose your channels

'சர்கார்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' படங்களின் ஒற்றுமைகள்

Saturday, October 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'திமிறு பிடிச்சவன் திரைப்படமும் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கும் சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். யூஏ மற்றும் தீபாவளி வெளியீடு ஆகிய இரண்டு அம்சங்களும் சர்கார் மற்றும் திமிறு பிடிச்சவன் படங்களின் ஒற்றுமைகள் ஆகும்.

விஜய் ஆண்டனி, நிவேதா பேத்ராஜ், டேனியல் பாலாஜி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அவரே இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் நாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் 166 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.