close
Choose your channels

இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தத்தெடுத்த பிரபல நடிகர்

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 வயது குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர், முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே உயிரிழந்தார். இதனை அடுத்து முசாபர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணின் உடல் போர்வையால் மூடப்பட்டு ஆம்புலன்ஸ் வரும் வரை வைக்கப்பட்டிருந்த நிலையில் தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய பச்சிளம் குழந்தையை அவர் மேல் மூடப்பட்டிருந்த போர்வையை எடுத்து அவரை எழுப்ப முயற்சித்தது. இதுகுறித்த வீடியோ நாடு முழுவதும் வைரலானது

இந்த நிலையில் முசாபர் ரயில் நிலையத்தில் இறந்த தாயை, எழுப்ப முயன்ற குழந்தையை நடிகர் ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் தத்து எடுத்துள்ளது. இந்த தகவலை ஷாருக்கான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பெற்றோரை இழந்த வலியை, தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுவதாகவும், அந்த வலி எப்படி இருக்கும் என்று தமக்கு தெரியும் என்றும் குறிப்பிட்ட ஷாருக்கான், நமது  அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் குழந்தையை தத்தெடுத்த ஷாருக்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.