close
Choose your channels

மனோரமாவுக்கு திருஷ்டி கழித்த கமல் மகள்

Monday, October 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த அதிசய நாயகி மனோரமா நம்மைவிட்டு மறைந்த சோகத்தில் தமிழ் திரையுலகமே மூழ்கியுள்ள நிலையில் அவருக்கு கவிதையஞ்சலி செலுத்தியிருக்கின்றார் உலக நாயகன் கமல்ஹாசன். உலகநாயகன் டியூப் இணையதளத்தில் மனோரமா குறித்து சிலவற்றை கூறியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பிறந்தபோது அவரை பார்க்க வந்திருந்த மனோரமா, கிராமத்து பாணியில் முகத்துக்கு திருஷ்டி கழித்து, நெற்றிப் பொட்டில் புறங்கையை மடக்கி சொடக்கிய வித்தையை பார்த்து எனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


அதே மனோரமாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்த ஸ்ருதிஹாசன், அவருக்கு திருஷ்டி கழித்து சொடக்கியுள்ளார். அப்போது மனோரமா நெகிழ்ச்சியுடன் 'எனக்கு திருஷ்டி கழிக்க யாருமே இல்லை, ராசாத்தி நீதான் இருக்கின்றாய்' என்றாராம். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை கமல்ஹாசன் தனது சேனலில் கூறியுள்ளார்.

மேலும் நாகேஷும் மனோரமாவும் தமிழ் சினிமாவின் மம்மிடாடி என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். களத்தூர் கண்ணம்மா முதல் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் வரை பல படங்களில் மனோரமாவுடன் கமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.