close
Choose your channels

16 பேர்களை கொன்று தின்ற புலி: உண்மை சம்பவ படத்தில் சிபிராஜ்

Thursday, March 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 16 பேர்களை கொன்று தின்ற புலியை சுட்டுக்கொலை செய்த வனத்துறை அதிகாரியின் கேரக்டரில் சிபிராஜ் நடிக்கவுள்ளார்.

சிபிராஜ் நடித்த 'ஜாக்சன் துரை' படத்தை இயக்கிய தரணிதரன், மீண்டும் சிபிராஜ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிபிராஜ் வனத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதை ஒரு உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக கொண்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் அவ்னி என்ற புலி, 16 பேர்களை கொன்று தின்றது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவு பெற்று வனத்துறை அதிகாரிகள் பெரும் போராட்டத்திற்கு பின் அவ்னி புலியை சுட்டுக்கொன்றனர். இந்த புலியை சுட்டு கொன்ற வனத்துறை அதிகாரி அக்சார் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த கேரக்டரில் தான் சிபிராஜ் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு சிபிராஜ் நடித்த 'சத்யா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜ், ரம்யா நம்பீசன் மீண்டும் இணையும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.