close
Choose your channels

சென்று வா அண்ணா: ஆனந்த கண்ணன் மறைவு குறித்து பாடகியின் உருக்கமான பதிவு!

Tuesday, August 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆனந்த கண்ணன் நேற்று இரவு திடீரென காலமானது சின்னத்திரை உலகினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பாடகியுமான ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆனந்த கண்ணன் மறைவு குறித்து ’சென்று வா அண்ணா’ என உருக்கமாக ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆனந்த கண்ணன் என் சகோதரர், தந்தை, நலவிரும்பி மற்றும் நண்பனை விட மேலானவர். அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். நான் என் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பலமுறை அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். எப்படி வாழ வேண்டும், எப்படி நேசிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர். எனது கணவரை திருமணம் செய்ய நான் அவருடைய ஒப்புதலைப் பெற்றேன்.

என்னைப் பற்றி என் அம்மா ஏதாவது புகார் கூறினால் ’ரம்யா என் சகோதரி, அவளைப் பற்றி அப்படி சொல்ல வேண்டாம் என்று அம்மாவிடம் எனக்காக வாதாடியவர். ஆனந்த கண்ணன் மறைவு மிகவும் வேதனையானது. அவர் உயிரோடு இருந்து இந்த பதிவை படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த அவர் மிகச்சிறமனிதர், மிகவும் நேர்மையானவர். அவர் தன்னைச் சுற்றி இருந்த அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். அவர் இன்று இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

உங்களுக்கு சொர்க்கத்தில் கண்டிப்பாக சிறப்பான ஒரு இடம் இருக்கும். நீங்கள் எப்போதும் என்னிடம் சொல்வது போல் உன்னை உங்களை நான் மிகவும் அதிகமாக நேசிக்கிறேன் அண்ணா, சென்று வாருங்கள் அண்ணா’ என்று பாடகி ரம்யா மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.