அமிதாப்பின் அடுத்த படத்தில் இணையும் 'மெர்சல்' டீம்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக 'உயர்ந்த மனிதன்' என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை 'கள்வனின் காதலி' படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே
மேலும் இந்த படத்திற்காக அமிதாப்பச்சன் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவிருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பதும், 'மெர்சல்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணையவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.