நான் செய்தது தவறுதான், என்னை கொலை செய்துவிடுங்கள்: ஸ்ரீரெட்டி உருக்கம்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்பின் தற்போது தன்னுடைய வாழ்க்கை வரலாறு படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் ஒரு உருக்கமான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியபோது, 'தன்னுடை பிறப்பை நினைத்து தானே வேதனைப்படுவதாகவும், தன்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள். என்றும், தன்னை பெற்றது ஒன்றுதான் தனது தாயார் செய்த தவறு என்றும், அவருக்கு தான் கொடூரமான தண்டனை கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் செய்த தவறுக்காக தனது தாயார் எல்லோரிடமும் திட்டு வாங்கி வருவதாகவும், தாயார் கொடுத்த இந்த உடம்பு, உயிரை எடுத்து என்னை கொலை செய்துவிடுங்கள்' என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.