close
Choose your channels

தமிழிசை ஒரு விஞ்ஞானி: கமல்ஹாசன் கிண்டல்

Friday, November 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது வாக்குவாதங்கள் நடந்து வருவது வழக்கமாக உள்ளது. அதேபோல் கமல் மற்றும் பாஜக தலைவர்களிடையே விமர்சனங்கள் பரிமாறப்படுவதும் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் கஜா புயலை ஆய்வு செய்த பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, 'கஜா புயலால் குடிசை வீடுகள் தான் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளது. ஏழைகள் ஏழையாகவே இருக்க ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்' என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் அதனை முடிக்கட்டும், பிறகு பார்ப்போம்' என்று கூறியுள்ளார். இதற்கு கிண்டலுடன் பதிலளித்த கமல்ஹாசன், 'தமிழிசை தான் விஞ்ஞானி, அவர்தான் ஆராய்ச்சி செய்வார். நான் சமூக ஆர்வலர், நான் என் வேலையை செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.

வழக்கம்போல் இருவரின் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் 'சபாஷ் சரியான போட்டி' என கிண்டலடித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.