close
Choose your channels

சென்னைக்கு 'தங்க மகன்' டீம் கொடுத்த ரூ.1கோடி?

Sunday, December 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் தாராளமாக நிதி வழங்கி வருவது குறித்து அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள 'தங்கமகன்' படத்தில் பணிபுரிந்த தனுஷ், சமந்தா, எமிஜாக்சன் மற்றும் அனிருத் ஆகியோர் கொடுத்த நிவாரண உதவி சுமார் ரூ.1 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னை வெள்ள நிவாரண நிதியாக தனுஷ் ரூ.5 லட்சமும், சமந்தா ரூ.30 லட்சமும், அனிருத் ரூ.50 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் மூலம் வழங்கியுள்ளனர். மேலும் தன்னார்வ தொண்டு ஒன்றுக்கு நடிகை எமிஜாக்சன் ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

இதுபோக தனுஷ் லட்சக்கணக்கான மதிப்புடைய நிவாரண பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளதால் 'தங்கமகன்' டீம் மட்டுமே கொடுத்த மொத்த நிவாரண நிதியின் மதிப்பு ரூ.1 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.