close
Choose your channels

ஒரே இயக்குனர் மீது தொடர் குற்றச்சாட்டு: 'சர்கார்' கதை விவகாரம் குறித்து தங்கர்பச்சான்

Tuesday, October 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' கதை விவகாரம் ஒருவழியாக சமரசமாக தீர்க்கப்பட்டுவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடர்ந்து பலர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் மீது விழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு முதல்முறையல்ல என்பதுதான் இந்த கடுமையான விமர்சனங்களுக்கு காரணமாக உள்ளது.

இந்த நிலையில் 'சர்கார்' கதை விவகாரம் குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் கூறியபோது, 'தொடர்ந்து ஒரே இயக்குனர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு விழுவது கவனிக்கத்தக்க ஒன்று ஆகும். இதை அவர்தான் சரி செய்து கொள்ள வேண்டும்

மேலும் ஒரு சிந்தனைவாதி கஷ்டப்பட்டு பல வருடங்கள் போராடி ஒரு கதையை உருவாக்கிய நிலையில் அவருடைய கதையை இன்னொருவர் எடுத்துக்கொள்வது என்பது சரியானது அல்ல. ஒருவேளை பயன்படுத்தி இருந்தாலும் நீதிமன்றம் வரை வராமல் ஆரம்பத்திலேயே இதனை சரி செய்திருக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.