close
Choose your channels

எனக்கு அவர் சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுப்பார்: பிரபல ஹீரோ குறித்து அம்மு அபிராமி

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அம்மு அபிராமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பிரபல ஹீரோ சாக்லேட் வாங்கி கொடுப்பார் என்று கூறியுள்ளார்.

விஜய் நடித்த ‘பைரவா’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. அதன்பின் ’ராட்சசன்’ ’அசுரன்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த அவர், தற்போது குக் வித் கோமாளி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளார். மேலும் அம்மு அபிராமி கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அருண் விஜய்யுடன் அம்மு அபிரமி நடித்த ‘யானை’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் மற்றும் அருண் விஜய்யுடன் நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அம்மு அபிராமி கூறியுள்ளார்

அதில் ’நான் இதுவரை பார்த்த நடிகர்களில் மிகவும் இனிமையானவர் அருண் விஜய்தான் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு அன்பாக இருப்பார். என்னிடம் மட்டும் இல்லாமல், எல்லோரிடமும் மிகவும் தன்மையுடன் பேசுவார். எனக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதை தெரிந்து அவர் ஷூட்டிங் வரும்போதெல்லாம் சாக்லேட் வாங்கி வருவார். எங்களுக்குள் படப்பிடிப்புக்கு வெளியே ஒரு நல்ல ஒரு நட்பு இருந்ததால்தான் படத்திலும் எங்களது கேரக்டர் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ‘யானை’ படம் நான் பார்த்துவிட்டேன், நான் எதிர்பார்த்ததை விட சூப்பராக படம் வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.