close
Choose your channels

சென்னை வெள்ளம்: மணிரத்னத்தின் மருத்துவ உதவி

Tuesday, December 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகினர்களின் நிவாரண உதவிகள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான அளவில் குவிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் லட்சக்கணக்கில் பண உதவி செய்து வந்த நிலையில் இசைஞானி இளையராஜா பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள் கொடுத்து உதவியுள்ளார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் தனது பங்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் டெட்டால் ஆகியவைகளை அளித்துள்ளார். இந்த தகவலை மணிரத்னத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுஹாசினி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.