close
Choose your channels

திருமணமாகாத இரண்டு தமிழ் நடிகைகள் கர்ப்பம்? இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் பரபரப்பு!

Friday, October 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமாகாத 2 தமிழ் நடிகைகள் தாங்கள் கர்ப்பம் என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகைகளான நித்யா மேனன் மற்றும் பார்வதி நாயர் ஆகிய இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ‘கர்ப்பம்’ என்ற பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பதிவு ஒரு திரைப் படத்தின் புரமோஷன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

‘வொண்டர் வுமன்’ என்ற திரைப்படத்தில் நித்யா மேனன் மற்றும் பார்வதி நாயர் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதாகவும் இந்த படம் கர்ப்பிணிகள் பற்றிய படம் என்றும் இந்த படத்தில் இருவருமே கர்ப்பிணிகளாக நடிக்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கர்ப்பம் என்ற போஸ்ட்டை பார்த்தவுடன் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் ஆச்சரியத்துடன் கவலை அடைந்த நிலையில் தற்போது இது படத்தின் புரமோஷன் என்று தெரியவந்ததும் தான் ரசிகர்கள் நிம்மதியாகி உள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பெங்களூர் டேய்ஸ்’ என்ற படத்தை அடுத்து மீண்டும் நித்யாமேனன் மற்றும் பார்வதி நாயர் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. அதேபோல் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் பார்வதி நாயர் நாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.