close
Choose your channels

'புன்னகை மன்னன்' ஸ்டைலில் ஒரு சம்பவம்: ஆனால் வேற லெவல் டுவிஸ்ட்!

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்’ ஸ்டைலில் தற்கொலை செய்து கொள்ள ஒரு காதல் ஜோடி சென்ற நிலையில் அந்த சம்பவத்தில் நடந்த டுவிஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன், ரேவதி, ரேகா நடிப்பில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’புன்னகை மன்னன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரேகா ஆகிய இருவரும் மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் கமல்ஹாசன் மட்டும் மரக்கிளையில் சிக்கி உயிர் தப்பி விடுவார். அவரது கண் முன்னே அவரது காதலி ரத்தவெள்ளத்தில் உயிர் விடும் காட்சி இந்த படத்தில் உருக்கமாக படமாக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் இதே போன்று உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் என்ற பகுதியை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று நதியில் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் இருவரும் ஒரே நேரத்தில் குதிக்க திட்டமிட்ட நிலையில் காதலர் மட்டும் திடீரென கடைசி நேரத்தில் குதிக்கவில்லை. இந்த நிலையில் திடீர் டுவிஸ்ட்டாக ஆற்றில் குதித்த காதலி, தன்னுடைய காதலன் ஆற்றில் குதிக்கவில்லை என்பதை அறிந்து பின்னர் நீந்தி கரை சேர்ந்தார். அதனை அடுத்து அவர் காவல் நிலையத்தில் தனது காதலர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.