close
Choose your channels

சிவாஜியின் நடிப்பை குறை சொன்ன நாகேஷ்: 'வசந்த மாளிகை' டிரைலர் விழாவில் சுவாரஸ்யம்

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'வசந்தமாளிகை. கடந்த 1972ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கியிருந்தார். சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், பாலாஜி, உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் இலங்கையில் வசூல் சாதனை செய்தது

இந்த நிலையில் இந்த படம் தற்போது டிஜிட்டலில் உருவாகியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் டிஜிட்டல் டிரைலர் ரிலீஸ் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த் விழாவில் பின்னணிப் பாடகி பி.சுசீலா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், சிவாஜியின் மகன் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சித்ரா லட்சுமணன், 'வசந்த மாளிகை' படத்தில் பல நாட்கள் தான் பணிபுரிந்திருப்பதாகவும், இதுபோன்ற ஒரு பத்து சிவாஜி படங்களை பார்த்தாலே போதும் இன்றைய இளைஞர்களுக்கு நடிப்பு வந்துவிடும் என்றும் கூறினார். மேலும் நடிப்பின் சிகரமான சிவாஜியின் நடிப்பையே நாகேஷ் குறை கூறிய ஒரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். கெளரவம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி நடித்து முடித்தவுடன் படக்குழுவினர் அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தார்களாம். ஆனால் நாகேஷ் மட்டும் 'இந்தப் படத்துல பல இடங்கள்ல நீங்க இங்கிலீஷ் பேசி பிச்சு உதறியிருக்கீங்க. ஆனா, இன்னைக்குப் பேசுனது சரியில்லை'னு அவரது நடிப்பை குறை கூறினாராம். அதற்கு சிவாஜி, 'நான் என்ன பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல படிச்சுட்டு வந்தா நடிக்கிறேன், இங்கிலீஷ் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லு, சரியா இருக்கா இல்லையானு சொல்லாதே!'னு நாகேஷை கிண்டல் செய்தாராம்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னணி பாடகி பி.சுசீலா, "சிவாஜியும் நானும் அண்ணன் தங்கைபோல பழகி வந்தோம். 'யாருக்காக...' பாடலுக்கு டி.எம்.சௌந்தர்ராஜன் உயிர் கொடுத்துப் பாடியிருக்காங்க, அதுக்கு இன்னும் உயிர் கொடுத்து நடிச்சிருப்பார் சிவாஜி. எங்களை மாதிரி பாடகர்கள் இத்தனை புகழோடு இருக்க, அப்படி ஒரு நடிப்பும் காரணம். நடிகர்கள் பாடலுக்கு நன்றாக நடித்தால்தான், அந்தப் பாடலைப் பாடியது யாரெனவே மக்கள் கேட்பார்கள்" என்று கூறினார்.

இந்த விழாவில் ஏராளமான சிவாஜி ரசிகர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.