close
Choose your channels

புயல் பாதிப்பு எதிரொலி: மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய வேண்டுகோள்..!

Thursday, December 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட ஒரு சில மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக தளபதி விஜய் தளபதி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

#கைகோர்ப்போம் துயர் துடைப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.