close
Choose your channels

ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம்: விஜய்சேதுபதி

Thursday, May 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நடந்த பல போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தான் என்றால் அது மிகையாகாது. காரணம் அந்த போராட்டத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.

அதேபோல் கடந்த 100 நாட்களுக்கும் மேல் அமைதியான வழியில் போராடி வந்த ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த மூன்று நாட்களில் வன்முறையாக மாறி 13 பேர் உயிரிழப்பிற்கும் காரணமாகிவிட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போன்றே இந்த போராட்டத்தையும் சாதித்து காட்டுவோம் என நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தூத்துகுடியில் ஒவ்வொரு காட்சியும் மனதை அலற வைக்கின்றது. தயவு செய்து சிலர்களின் பேச்சை கேட்டு தப்பான வழியில் செல்லாமல் ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். போலீஸார் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தை வைத்து விளம்பரம் தேடும் ஒருசில அரசியல்வாதிகளை இனம்கண்டு அவர்களை இந்த போராட்டத்தில் இருந்து ஒதுக்கினாலே இந்த போராட்டமும் ஜல்லிக்கட்டு போன்றே வெற்றியடையும் என்றும் அந்த வெற்றிக்கு முழு பொருப்பும் அந்த பகுதி மக்களையே சேரும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.