close
Choose your channels

அருள்நிதி இயக்குனருடன் கைகோர்க்கும் சீயான் விக்ரம்

Wednesday, March 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் தற்போது ஆனந்த்சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்ததே. விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நடித்து வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லடாக் மற்றும் பாங்காக்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 'இருமுகன்' படத்தை அடுத்து விக்ரம், 'நான் சிகப்பு மனிதன்' இயக்குனர் திரு இயக்கத்தில் 'கருடா' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த இரண்டு படங்களை அடுத்து விக்ரம், அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜய் ஞானமுத்து கூறிய த்ரில் கதை ஒன்று விக்ரமுக்கு பிடித்துள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. அஜய்ஞானமுத்து ஏற்கனவே அருள்நிதி நடித்த 'டிமாண்ட்டி காலனி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.