close
Choose your channels

தேர்தல் நேரத்தில் வெளிநாடு செல்கிறாரா விஷால்?

Saturday, March 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே 'மதகஜ ராஜா', மற்றும் 'ஆம்பள' படங்களில் நடித்த விஷால், மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக சுந்தர் சி -விஷால் படக்குழு துருக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. துருக்கியில் இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், ஆக்சன், ரொமான்ஸ் உள்பட முக்கிய காட்சிகள் இந்த 50 நாட்களில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'கத்திச்சண்டை' படத்திற்கு பின் விஷாலுடன் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேருகிறார் நடிகை தமன்னா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஷால், சுந்தர் சி உள்பட படக்குழுவினர் இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக துருக்கி செல்வதால் ஏப்ரல் 18 அன்று நடைபெறும் மக்களவை தேர்தலில் அவர்கள் வாக்களிப்பார்களா? வாக்களிப்பதற்காக துபாயில் இருந்து சென்னை திரும்புவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.