close
Choose your channels

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு முயற்சி: நடிகை கொடுத்த புகாரினால் இருவர் கைது

Friday, July 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகளை வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு இழுக்க முயற்சித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவருக்கு கடந்த சில நாட்களாக ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்துள்ளது. அதில் நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல்  3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து  ஜெயலட்சுமி, தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது நடிகைகளை பாலியல் தொழிலுக்கு இழுக்கும் முயற்சி என்பதும், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து அவர்களது மொபைல் எண் மற்றும் புகைப்படங்களை எடுத்து ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் மெசேஜை அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி பாலியல் தொழிலுக்காக இந்த கும்பல் முக்கிய நடிகைகள் உள்பட சுமார் 56 பேர்களை தொடர்பு கொண்டதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அந்த வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள தகவல்களை திரட்டிய ஜெயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.