close
Choose your channels

'ஜிகர்தண்டா 2' வெற்றியினால் கார்த்திக் சுப்புராஜ்-க்கு கிடைத்த வாய்ப்பா? 'சூர்யா 44' படத்தின் மாஸ் தகவல்..!

Saturday, March 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா 44’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் சூர்யா ரசிகர்களுக்கே இது பெரும் ஆச்சரியமாக இருந்தது

ஏனெனில் சூர்யாவின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க போகிறார் என்றும் அதனை அடுத்து அவருடைய லைன் அப்பில் வெற்றிமாறன், ரவிகுமார், லோகேஷ் கனகராஜ், ஞானவேல் ஆகியோர் இருந்த நிலையில் திடீரென சூர்யா படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் வெற்றியின் காரணமாகத்தான் உடனே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் இரு தரப்பிலும் இருந்து மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பே சூர்யாவிடம் கார்த்திக் சுப்புராஜ் ஒன்லைன் கதையை கூறியதாகவும் அந்த கதை சூர்யாவுக்கு பிடித்து விட ஸ்கிரிப்ட் வேலைகளை கவனியுங்கள் என்று கூறியதாகவும் அந்த படம் தான் தற்போது அறிவிப்பாக வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த ’புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதை அடுத்து தான் உடனடியாக கார்த்திக் சுப்புராஜ் பட அறிவிப்பு வெளியானது என்றும் இந்த படத்தை முடிக்கும் முன்னர் சுதா கொங்கரா ’புறநானூறு’ படத்திற்கு தயாராகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.