அருண்விஜய்க்கு கால்ஷீட் தர மறுத்த விஜய்! ஏன் தெரியுமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விஜய் நடிக்கும் படம் ஒன்றை தான் தயாரிக்க விரும்பி, அவரை கடந்த சில வருடங்களுக்கு முன் சந்தித்ததாகவும், ஆனால் தனக்கு அவர் கால்ஷீட் தராமல் அவர் கொடுத்த அறிவுரை இன்று தனது வாழ்க்கையையே மாற்றியுள்ளதாகவும் நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அருண்விஜய், விஜய்யுடனான மறக்க முடியாத சந்திப்பு ஒன்றை கூறுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த அருண்விஜய், 'விஜய்யை தான் பலமுறை சந்தித்திருந்தாலும் தனக்கு மறக்கமுடியாத ஒரு சந்திப்பு இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தான் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, ஒரு திரைப்படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்பியதாகவும், தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு சென்றதாகவும் கூறிய அருண்விஜய், அப்போது 'தயாரிப்பு எல்லாம் வேண்டாம், பொறுமையாக விடாமல் முயற்சி செய்யுங்கள், உங்கள் திறமைக்கு நிச்சயம் நடிப்பு சான்ஸ் கிடைத்து பெரிய ஆளாக வருவீர்கள்' என்று விஜய் அறிவுரை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய் கூறிய அறிவுரைப்படி நடந்த அருண்விஜய்க்கு 'என்னை அறிந்தால்' ஒரு திருப்புமுனை படமாக அமைந்து அதன் பின்னர் தற்போது மணிரத்னம் இயக்கும் 'செக்க சிவந்த வானம்', 'தடம்' மற்றும் பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' ஆகிய படங்களில் நடித்து பிசியான நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.