close
Choose your channels

மயக்கம் போட்ட யாஷிகா! குத்தாட்டம் போட்ட யாஷிகா! எது உண்மை

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ கடந்த சில நிமிடங்களுக்கு முன்வந்தபோது அதில் யாஷிகா திடீரென மயக்கம் போட்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பாக மாறி, யாஷிகாவை கைத்தாங்கலாக கன்பெக்ஷன் அறைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நடந்து ஒருசில நிமிடங்களில் தற்போது அடுத்த புரமோ வெளிவந்துள்ளது. இதில் பாலாஜியுடன் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் குத்தாட்டம் போடுகின்றனர்.

';சொடக்கு மேல சொடக்கு போடு' என்ற பாடலுக்கு பாலாஜியுடன் குத்தாட்டம் ஆடும் ஆறு பெண் போட்டியாளர்களில் யாஷிகாவும் ஒருவர். சொல்லப்போனால் யாஷிகாதான் மற்றவர்களை விட எனர்ஜியாக நடனம் ஆடுகிறார். சில நிமிடங்களுக்கு முன் மயக்கம் போட்டு விழுந்த யாஷிகாவா? இப்படி குத்தாட்டம் போடுகிறார்? என்ற ஆச்சர்யம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாலாஜியின் இந்த குத்தாட்டத்தை பார்த்து நித்யா என்ன கமெண்ட் போடப்போகிறாரா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரே ஆண் போட்டியாளரான பாலாஜி, டைட்டிலை வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, சினிமாவில் கூட கிடைக்காத அழகிகளுடன் குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு இன்று அவருக்கு கிடைத்துவிட்டது. அதுவே அவருக்கு கிடைத்த ஒரு வெற்றிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.