close
Choose your channels

அதிமுகவின் இரு அணி இணைப்பின் தாமதத்திற்கு காரணம் யார்? கருணாஸ்

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் 122 எம்.எல்.ஏக்களில் ஒருவரான நடிகர் கருணாஸ், அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றும் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகாலம் பூர்த்தி செய்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே என்விருப்பம். ஜெயலலிதா வளர்த்த கட்சி இரண்டாகப் பிளவுபடக்கூடாது. ஆட்சி நான்கு ஆண்டுகள் பூர்த்தியானால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும். தற்போது நடக்கும் சம்பவங்கள், ஜெயலலிதா எண்ணத்துக்கு மாறாக உள்ளன. 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற வாக்குப்படி நடந்துகொள்ள வேண்டும்'
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் மாறி மாறி கூறி தெரிவித்து வரும் கருத்துக்களே காரணம்' என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக பல நலத்திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி, மக்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றார். தொடர்ந்து அம்மாவின் ஆட்சியை அனைவரும் இணைந்து நடத்தி காண்பித்தால்தான் அவருடைய ஆத்மா சநதியடையும். இரு அணிகளையும் இணைக்கும் அந்த புனிதமான பணியில், அதிமுக கூட்டணி இயக்கமாகிய முக்குலத்தோர் புலிப்படை தன்னை இணைத்து கொண்டு, பணியாற்றும் என்றும் கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.