close
Choose your channels

ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையில் திடீர் திருப்பம்

Wednesday, September 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஃபெப்சி அமைப்பிற்கும் இடையே பிரச்சனைகள் நடந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஃபெப்சி நிறுவனம் ஒருபக்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, தயாரிப்பாளர் சங்கமோ ஃபெப்சி ஊழியர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிவிக்க கோலிவுட் திரையுலகில் ஒருவித டென்ஷன் இருந்தது

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர்கள் உள்பட இருதரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி எந்த பிரச்சனையும் இன்றி அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினியின் 'காலா', விஜய்யின் 'மெர்சல்' உள்பட சுமார் 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு இடையிடையே சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் காரணமாக இனிமேல் தடையின்றி படப்பிடிப்புகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.