close
Choose your channels

டிசம்பர் வரை சம்பளம் இல்லாமல் நடிக்க போகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்

Saturday, May 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தொற்று காரணமாக கோலிவுட் திரையுலகில் அனைத்து படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடங்கியதால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகி உள்ளது. குறிப்பாக அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களில் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு வட்டி கஷ்டமே பெருமளவு இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளரின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்ட ஒரு சில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து வரும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம். விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் தங்கள் சம்பளத்தை 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்து உள்ளனர் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல குணசித்திர நடிகர் அருள்தாஸ், தான் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நடிக்கும் எந்த படத்திற்கும் சம்பளம் வேண்டாம் என்றும் என்று அறிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பால் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியம் ஏற்பட்டது. இதேபோல மற்ற நடிகர்களும் தங்களுடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைத்து தயாரிப்பாளரின் நஷ்டத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

நடிகர் அருள்தாஸ் சமீபத்தில் வெளியான ‘மகாமுனி’, ‘வெண்ணிலா கபடிக்குழு 2’, ‘ராட்சசி’, ‘பேரன்பு’ உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos