close
Choose your channels

கமல் உள்பட 138 பேர்களுக்கு நோட்டீஸ்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Tuesday, March 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல் உள்பட 138 பேர்களுக்கு நோட்டீஸ்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் அரசியல் கட்சியை தொடங்கி அந்த கட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் பிசியாக உள்ள நிலையில் கமல்ஹாசன் உள்பட 138 பேர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறு சென்னை ஐகோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஒருவர் ஈசிஆர் சாலையில் சொகுசு கட்ட சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கோரினார். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அவருக்கு அனுமதி மறுக்கவே இதுகுறித்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே ஈசிஆர் சாலையில் கமல்ஹாசன், நடிகை ரம்யாகிருஷ்ணன் உள்பட 138 பேர் அனுமதியின்றி சொகுசு பங்களா கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அனுமதியின்றி சொகுசுபங்களா கட்டிய அனைவருக்கும் நோட்டீஸ் வழங்குமாறு சென்னை ஐகோர்ட். மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 9ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.