close
Choose your channels

23 வயது பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: பெரும் பரபரப்பு

Tuesday, February 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொல்கத்தாவை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை சுபர்ணா ஜாஷ் என்பவர் கடந்த ஞாயிறு அன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொல்கத்தாவை சேர்ந்த சுபர்ணா ஜாஷ் என்பவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அவர் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவரது பெற்றோர்கள் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இதனையடுத்து காவல்துறையினர் சுபர்ணா ஜாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகை சுபர்ணா ஜாஷ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தற்கொலைக்கு முன் கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்பதால் இந்த தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சமீபத்தில் ஹிந்தி நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது தொலைக்காட்சி நடிகை ஒருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.