close
Choose your channels

மகனுடன் சென்று இளைஞரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய தமிழ் நடிகை.. போலீசில் புகார்

Thursday, March 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் தனது மகனுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் இளைஞர் ஒருவரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நடிகை மற்றும் அவரது மகன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா ட்ராவல்ஸ்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் நிலையில் டேவிட் ராஜ் என்பவர் நடிகை ராதா மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட் என்பவர் கடந்த 14ஆம் தேதி இரவில் சாலிகிராமம் அருகே சென்று கொண்டிருந்த நிலையில் ராதா மற்றும் அவரது மகன் தருண் ஆகிய இருவரும் சேர்ந்து எனது மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் நடிகை ராதா தனது மகனுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் அவரை கிண்டல் செய்ததாகவும் இதனால் இரு தரப்புக்கும் இடையே கலகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு ரிச்சர்ட்ஸ் உறவினர் ஒருவர் நடிகை ராதா வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ராதா மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் அதேபோல் ரிச்சர்ட்ஸ் இடமும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.