close
Choose your channels

ஆரியின் திடீர் விசிட்டால் இன்ப அதிர்ச்சி அடைந்த அனிதா: வைரல் புகைப்படம்!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் எப்போதாவது ஒருமுறை தான் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்கள் என்பதும் ஒரு சிலர் அதன் பிறகு சந்திக்கவே இல்லை என்று கூறிய பேட்டிகளையும் பார்த்து வந்தோம்.

ஆனால் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை பொருத்த வரை அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அவ்வப்போது ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு வரும் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் 4 போட்டியாளர்களில் ஒருவரான அனிதாவின் வீட்டிற்கு ஆரி சென்றுள்ளார்.

அனிதா, அனிதாவின் கணவர் மற்றும் அம்மா உட்பட அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்துடன் ஆரி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் ஆரியின் திடீர் விசிட் அனிதாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரி மற்றும் அனிதா ஆகிய இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தற்போது இருவரும் அண்ணன் தங்கை என்ற உறவை மேம்படுத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அனிதா சமீபத்தில் அர்ச்சனா வீட்டிற்கு சென்றுள்ளார் என்பதும் அது குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ரியோ மற்றும் கேபிரில்லா ஆகிய இருவரும் சோம் வீட்டுக்கு சென்று எடுத்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. இதிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பில் இருப்பது மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.a

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.