close
Choose your channels

17 மாடிகள், 10 திரையரங்கம்: புத்துயிர் பெறுகிறது அபிராமி மெகா மால்

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் அடையாளங்களில் ஒன்று அபிராமி மெகா மால். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திரையரங்க வளாகம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 2005ஆம் அண்டு 7 நட்சத்திர திரையரங்கமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்த அபிராமி மெகாமால் முற்றிலும் புதிய வடிவம் பெறும் வகையில் பணிகள் தொடங்கவுள்ளது . மொத்தம் 17 மாடிகளாக உருவாகவுள்ள இந்த கட்டிடத்தில் முதல் மூன்று மாடியில் 10 திரையரங்குகளும், வணிக வளாகமும் இடம்பெறவுள்ளது. அதற்கு மேல் 14 மாடிகளில் அடுக்குமாடி குடியிருப்பு உருவாகவுள்ளது. துபாயில் பல பெரிய கட்டிடங்களை வடிவமைத்த பிரபல நிறுவனம் ஒன்று இந்த கட்டுமான பணிகளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரமாண்ட கட்டிடம் முற்றிலும் சைவ பிரியர்களுக்காக உருவாகவுள்ளதாம். இக்கட்டிடத்தில் குடியிருக்க உரிமை கோருபவர்களில் சைவ உணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.