close
Choose your channels

'மங்காத்தா' தயாரிப்பாளருக்கு வாழ்த்து கூறிய ஆர்யா: காரணம் இதுதான்!

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அவர்களின் மகனும் ’மங்காத்தா’ உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரிக்கு நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கடந்த 2010ஆம் ஆண்டு அனுஷா என்ற வழக்கறிஞரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ருத்ரதேவ் என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இன்று பெயர் வைக்கும் விழா நடைபெற்றது.

இந்த குழந்தைக்கு தற்போது வேதாந்த் தயாநிதி என்று பெயர் வைத்துள்ளதாக தயாநிதி அழகிரி ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் தயாநிதி அழகிரி தனது மனைவி குழந்தையுடன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு தான் நடிகர் ஆர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களும் தயாநிதி அழகிரியின் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.