close
Choose your channels

அதர்வா நடிக்கும் 'ருக்குமணி வண்டி வருது' படத்தின் கதை?

Tuesday, August 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா, ஆனந்தி நடிப்பில் கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட 'சண்டிவீரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் மற்றுமொரு கிராமத்து கதை கொண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இயக்குனர் ராஜமோகன் இயக்கவுள்ள இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு சுதாகர்-சரிதா நடித்த 'பொண்ணு ஊருக்கு புதுசு' என்ற படத்தில் இளையராஜா பாடிய பாடலான 'ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது' என்ற பாடல் அந்த காலத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன பாடல். இந்த பாடலில் வரும் 'ருக்குமணி வண்டி வருது' என்பதையே ராஜமோகன் தனது புதிய படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டிலை தேர்வு செய்தது குறித்து ராஜமோகன் கூறியபோது, "இந்த படத்தின் கதைப்படி மலையடிவாரத்தில் உள்ள ஒரு பழமையான கிராமத்தில் ஒரு ஜீப் வருகிறது. அந்த ஜீப்பை அதிசயமாக அந்த கிராமத்தினர் பார்ப்பார்கள். ஜீப்பை ஓட்டி வரும் அதர்வா சந்திக்கும் காமெடியான அனுபவங்கள்தான் படத்தின் கதை' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜீப்பும் ஒரு கேரக்டராகவே நடித்துள்ளது. பொதுவாக நடிகர்கள் அறிமுகமாகும்போதுதான் அறிமுகப்பாடல் படங்களில் இடம்பெறுவதுண்டு. ஆனால் இந்த படத்தில் ஜீப் அறிமுகமாகும்போது, 'ருக்குமணி வண்டி வருது' என்ற அறிமுகப்பாடலை வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

அதர்வா ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கவிருக்கும் இந்த படம் கொடைக்கானல் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.