close
Choose your channels

ரூ.100 கோடி முறைகேடு. பிரபல நடிகை கணவருடன் கைது

Friday, December 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான தான்யா மேரி வர்கீஸ் என்பவர் தனது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் 'திருடி', மற்றும் 'வீரமும் ஈரமும்' ஆகிய படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் தான்யா. இவருடைய கணவர் ஜான் என்பவரும் ஒரு நடிகர்தான். இந்நிலையில் ஜான், அவரது சகோதரர் சாம்சன் மற்றும் இவர்களின் தந்தை ஜாக்கேப் சாம்சன் ஆகியோர் இணைந்து நடத்திய 'சாம்சன் அன் சன்ஸ் பில்டர்ஸ் 'என்ற பில்டிங் நிறுவனம் பொதுமக்களிடம் வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட் கட்டி தருவதாக சுமார் ரூ.100 கோடி அளவில் வசூல் செய்தது.

ஆனால் கொடுத்த வாக்குறுதியின்படி இந்நிறுவனம் எந்த கட்டிடத்தை கட்டாததால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் காவல்நிலையங்களில் புகார் செய்தனர். நடிகை தான்யா மற்றும் அவரது கணவரின் நிறுவனத்தின் மீது புகார்கள் அடுக்கடுக்காக வந்த நிலையில் ஜான், சாம்சன், ஜாக்கேப் ஜான்சன் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைவர் நடிகை தான்யா என்பதால் அவரும் கைது செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.