close
Choose your channels

ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும்.. நடிகர் ரஞ்சித் பேட்டி..!

Monday, January 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாட்டை காப்பாற்றுவதற்காக ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் நான் வரவேற்பேன் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான ரஞ்சித் சென்னிமலை முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு வழிபட்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் இல்லாமல் இந்த உலகமே இல்லை. என்னை பொருத்தவரை அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதி தான் என்று கூறினார்

அப்போது விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு ’நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும், நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு உட்கார்ந்து விடுவார்கள். ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்து நாட்டை காப்பாற்றினால் எனக்கு சந்தோசம் தான்’ என்று தெரிவித்தார்

நான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை, ஒருவேளை நல்லவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம்’ என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.