தங்கமெடல் வாங்கிய தமிழருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சமீபத்தில் நடந்து முடித்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம் என்ற தமிழர் 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஏற்கனவே பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவரை நேரில் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சதீஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சிவகார்த்திகேயன் உடனான இந்த சந்திப்பு ஒரு அற்புதமான சந்திப்பு. சிவகார்த்திகேயன் ஒரு மனிதநேயமுள்ள அருமையான மனிதர். காமன்வெல்த் மெடலுடன் அவரை சந்தித்தது உண்மையான சந்தோஷத்தை தந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பெரும் ஊக்கத்தை தருவதாக இருந்தது. ஒரு கடினமான உழைப்பாளியிடம் இருந்து பெற்ற பாராட்டுக்கும், அவர் கொடுத்த பரிசுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.