close
Choose your channels

முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய்சேதுபதி: முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்!

Friday, August 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலமைச்சரை நேரில் சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் நடிகர் ஜய்சேதுபதி சந்தித்தார்

இந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் தினசரி ரூபாய் ஐந்தாயிரம் என்று வசூலிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது திடீரென 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இவ்வாறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் எனவே கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டார்

விஜய் சேதுபதி கோரிக்கையை கவனமுடன் கேட்டு கொண்ட முதல்வர் ரங்கசாமி அவர்கள் இது குறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை விஜய்சேதுபதி சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.