close
Choose your channels

முடக்கப்பட்ட கெளதமியின் 6 வங்கிக்கணக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Thursday, March 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விவசாய நிலத்தை விற்பனை செய்த வழக்கில் நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நடிகை கெளதமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்தேன். அந்த சொத்து வருமான வரிச்சட்டப்படி மூலதன சொத்தின் கீழ் வராது. அந்த சொத்து ரூ.4.10 கோடிக்கு விற்கப்பட்டது. வருமான வரித்துறை கூறியபடி ரூ.11.17 கோடிக்கு விற்கவில்லை.

2016-17 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக்கொண்டதோடு, வட்டியுடன் சேர்த்து 9.14 லட்சத்தை வரியாக செலுத்திவிட்டேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையத்திலிருந்து வந்த கடிதத்தில் ‘விவசாய நிலத்தின் வருவாய் ரூ.11.17 கோடி என கருதி மதிப்பீட்டு ஆணை அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவைத் தொடர்ந்து எனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்" என நடிகை கெளதமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு நடிகை கெளதமியின் முடக்கப்பட்ட 6 கணக்குகளை விடுவிக்கும்படி வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.