close
Choose your channels

ஊரடங்கு விடுமுறையில் நாற்று நடும் தமிழ் நடிகை

Tuesday, May 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு விடுமுறையால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் பிரபல நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து தங்களது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். ஒருசிலர் பொழுதுபோக்கு வீடியோக்களையும் ஒருசிலர் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நடிகையும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். கடந்த சில நாட்களுக்கு முன் கீர்த்தி பாண்டியன் தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரால் உழுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது தெரிந்ததே. தற்போது உழுத நிலத்தில் நாற்று நடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை கீர்த்தி பாண்டியன் வயலில் இறங்கி, நாற்று நடும் பெண்களுடன் இணைந்து நாற்று நடும் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் தான் நாற்று நடுவதாகவும், இது பொது இடம் கிடையாது என்றும், அதனால் தான் ஊரடங்கை மீறவில்லை என்றும் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.