close
Choose your channels

மறுமணம் செய்ய போகிறாரா நடிகை நிஹாரிகா? அவரே அளித்த பதில்..!

Sunday, January 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ என்ற படத்தில் நடித்த நடிகை நிஹாரிகா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் அவர் விரைவில் மறுமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நடிகர் நாக பாபு மகள் நிஹாரிகாவுக்கும், சைதன்யா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரமாண்டமாக திருமணம் நடந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தன்னுடைய விவாகரத்து குறித்தும் மறுமணம் குறித்தும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை நிஹாரிகா பேசியுள்ளார். அதில் என் திருமணம் பெற்றோர் நிச்சயம் பார்த்து செய்த திருமணம். வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம் ஆனால் நாம் நினைத்ததெல்லாம் எதுவும் நடப்பதில்லை அப்படித்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது.

விவாகரத்து பெற்றதும் என்னை பலரும் பலவிதமாக பேசினார்கள். ஆனால் எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொண்டேன். இனிமேல் யாரையும் நம்ப கூடாது என்று பாடத்தை நான் படித்துக் கொண்டேன்.

எனக்கு 30 வயது தான் ஆகிறது. எனவே ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்வது யோசிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.