close
Choose your channels

பிரமிப்பின் பிரமாண்டம்: ஒரு புகைப்படத்தில் கூட முகத்தை காட்டாத ரம்யா பாண்டியன்!

Sunday, September 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தஞ்சை பெரிய கோவிலில் நடிகை ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவுக்கு 'பிரமிப்பின் பிரம்மாண்டம்’ என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த புகைப்படங்களில் ஒன்றில் கூட அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் தஞ்சை பெரிய கோவிலில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வித்தியாசமான கோணத்தில் தஞ்சை பெரியகோவிலின் கோபுரத்துடன் கூடிய ரம்யா பாண்டியனின் அழகிய புகைப்படங்கள் அசத்தலாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படங்களில் ஒன்றில் கூட ரம்யா பாண்டியன் முகம் தெரியவில்லை என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.