close
Choose your channels

"என்னிடம் கேட்டால் நான் பதில் தருகிறேன்” அமீர்கான் வதந்தி குறித்து பாலிவுட் நடிகை

Saturday, July 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் அமீர்கானும் அவருடன் `தங்கல்' படத்தில் நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக்கும் காதலித்து வருவதாக வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வதந்தி குறித்து நடிகை பாத்திமா சனா ஷேக் விளக்கமளித்தபோது, ’இது போன்ற செய்திகள் முன்பு என்னை பாதிக்கும். ஏனெனில் இது போன்ற பெரிய அளவில் ஒரு பிரச்சனைகளை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. என்னை பற்றி உண்மையில்லாததை எழுதுகிறார்கள்.

என்னை பற்றி எழுதுபவர்களுக்கு அது உண்மையா என்று கூட தெரியாது. அதை படிக்கும் மக்களோ, நான் நல்ல பெண் இல்லை என்று நினைக்க வாய்ப்பு உள்ளது. என்னைப்பற்றி ஏதேனும் விபரம் தேவை என்றால் முதலில் என்னிடம் கேளுங்கள், நானே பதில் சொல்கிறேன். என்னை பற்றி யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது இது போன்ற செய்திகள் என்னை பாதிக்கிறது. ஆனால் இப்போது அதை கண்டுகொள்ளாமல் இருக்க கற்றுக்கொண்டாலும் சில நாட்களில் அது என்னை பாதிக்கிறது’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.